தமிழகத்தில் ஓய்ந்திருந்த மழை மீண்டும் துவங்கியது - சென்னை, திருவண்ணாமலை, நாகையில் இரவு முதல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்து மக்களை இன்னலில் தள்ளி ஓய்ந்திருந்த பருவ மழை, தற்போது மீண்டும் பெய்ய ஆரம்பித்துள்ளது.

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது.வரலாறு காணாத அளவுக்கு பெய்த கனமழையால் சென்னை மற்றும் கடலூர் உட்பட பல வட மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.

Rain starts in TN again today

மழையால் ஏற்பட்ட தாக்கம் இன்னும் சரிவர தணியாத நிலையில் மீண்டும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. திருவண்ணாமலை,சென்னை,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருவதாகவும் நாகை,காரைக்கால் மற்றும் புதுவையில் கனமழை பெய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்த வரை நுங்கம்பாக்கம்,கோடம்பாக்கம்,மற்றும் கோட்டூர்புரத்தில் மழை பெய்து வருகிறது. சென்னையில் ஈக்காட்டு தாங்கல் அசோக்நகர் , கிண்டி ஆகிய பகுதிகளில் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+