Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராமேஸ்வரத்தில் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கிய மீனவர்கள்.. நிரந்தர தீர்வு எப்போது தான் கிடைக்கும்?

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: மீனவர்கள் கைது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் இன்று முதல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தபட்டுள்ளன. மீனவர்களின் வேலை நிறுத்தத்தால் நேரடியாகவும் மறைமுகமாவும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர்.

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்வதை இலங்கை கடற்படை வாடிக்கையாக கொண்டுள்ளது. இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் நிலையில் மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்.

Fishermen s strike Rameswaram fishermen Sri Lankan Navy

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது

எனினும், இலங்கை கடற்படையின் அட்டூழியம் முடிந்தபாடில்லை. இந்த நிலையில்தான், ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தது. அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தது. இதையடுத்து கைதான 7 மீனவர்களும் நேற்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மீனவர்கள் 7 பேரையும் வருகிற வரும் 21 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் 7 மீனவர்களும் இலங்கை வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இது தமிழக மீனவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, நேற்று துறைமுக பகுதியில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நிறைவேறுமாறு:-

19 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம்

* மீன் பிடி தடைகாலம் முடிந்து மீன் பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் கைதான மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* இலங்கை கடற்படை பறிமுதல் செய்த நாட்டுப்படகு, விசைப்படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
* மீனவர்கள் கைது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். மீனவர் பிரச்சினைக்கு நாடளுமன்றத்தில் ஒட்டு மொத்த தமிழ் எம்பிக்களும் குரல் கொடுக்க வேண்டும்

* பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் புதன்கிழமை முதல் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
* அதேபோல, சுதந்திர தின நாளில் தங்கச்சிமடத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டம், 19 ஆம் தேதி தங்கச்சிமடத்தில் மதியம் 3 மணியளவில் ரயில் மறியல் போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இன்று முதல் வேலைநிறுத்த போராட்டம்

இதற்கிடையில், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் இன்று முதல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் மீனவர்கள் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. இதன்படி இன்று ராமேஸ்வரத்தில் மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளது.

இதனால், 700 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் நிறுத்தபட்டுள்ளன. மீனவர்களின் வேலை நிறுத்தத்தால் நேரடியாகவும் மறைமுகமாவும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர். வேலை நிறுத்தம் காரணமாக பல கோடி ரூபய் வருவாய் இழப்பு ஏற்படும் நிலை எற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+