ரத்னம் டா, மணிரத்னம் டா...: உங்களுக்கு இந்த வாட்ஸ்ஆப் மெசேஜ் வந்துச்சா?
சென்னை: தாலியை வைத்து இயக்குனர் மணிரத்னம் எப்படி எல்லாம் படம் எடுத்துள்ளார் என்பதை விளக்கும் தகவல் வாட்ஸ்ஆப்பில் பரவிக் கொண்டிருக்கிறது.
தமிழர்களும் தாலி சென்ட்டிமென்டும் என்றும் பிரிக்க முடியாதது ஆகும். ஒரு படத்தில் கூட விவேக் கூறுவார் இந்த தாலி சென்டிமென்ட்டை வைத்து எத்தனை டிவி சீரியல்

எடுத்தாலும் ஓடும் என்று. அத்தகைய தாலி சென்டிமென்ட்டை வைத்து பல காலம் படம் இயக்கி வருபவர் மணிரத்னம்.
அவர் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஓ காதல் கண்மணி படத்தில் தாலி கட்டாமல் கணவன் மனைவி போன்று வாழும் லிவ் இன் ரிலேஷன்ஷிப் பற்றி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வாட்ஸ் ஆப்பில் ஒரு தகவல் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அந்த வாட்ஸ்ஆப் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தாலி கட்டி அவரவர் வீட்டில் வாழ்ந்தால் - அலைபாயுதே
தாலி கட்டாம வாழ்ந்தால் - ஓ காதல் கண்மணி
தாலி கட்டியும் வாழாமல் இருந்தால் - மௌன ராகம்
இன்னொருவன் தாலி கட்டிய பெண்ணை கடத்தி கொண்டு போனால் - ராவணன்
தாலி கட்டலாமா வேண்டாமா என சிந்தித்தால் - கடல்
ஸ்கூல் பொண்ணுக்கு தாலி கட்டினால் - நாயகன்
ஒரு மனைவிக்கு தாலி கட்டிவிட்டு இரு மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தால் - அக்னி நட்சத்திரம்
ஒரு பொண்ணுக்கு இரண்டு பேர் தாலி கட்ட நினைத்தால் - திருடா திருடா
தாலி கட்டிய புருஷனுக்காக போராடினால் - ரோஜா
ரத்னம் டா...மணிரத்னம் டா...












Click it and Unblock the Notifications