நிவாரண பொருட்கள் வழங்க விரும்புவோர் அறிவாலயத்தில் ஒப்படைக்கலாம்: கருணாநிதி
சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்ளை வழங்க விரும்புவோர் அவற்றை அண்ணா அறிவாலயத்தில் கொண்டு வந்து ஒப்படைக்குமாறு திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கழக உடன்பிறப்புகள் தங்களால் இயன்ற அளவுக்கு உதவிகளை வழங்கிட முன்வர வேண்டுமென்று 1-12-2015 அன்று நான் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, கழகத் தோழர்கள் பலரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பல்வேறு அடிப்படைத் தேவையான பொருள்களை வழங்கிட முன் வந்து, அவற்றை வழங்கி வருகிறார்கள்.

மேலும் சிலர், அத்தகைய பொருள்களை எங்கே கொண்டு போய், யார் மூலமாக வழங்குவது என்று தெரியாத நிலையில் இருப்பதாக தலைமைக் கழகத்திற்கும், தனிப்பட்ட முறையிலும் தொலைபேசி வாயிலாக விசாரித்து வருவதையொட்டி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக அத்தியாவசியப் பொருள்களை உதவிட முன் வரும் கழகத் தோழர்கள், கழகத் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கொண்டு வந்து ஒப்படைத்தால், அதனைப் பெற்று விநியோகம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அதிமுகவை சமுதாய கட்சியாக மாற்றியவர் எடப்பாடி பழனிசாமி.. தென் மாவட்டங்களில் ஆட்டத்தை தொடங்கிய ஓபிஎஸ்! -
+2 மாணவி கொலை சம்பவம்.. 2 நாட்களாக போராடுகிறோம்.. உடனே ஏன் வரலை.. கனிமொழியை கேட்ட உறவினர்கள்! -
மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு.. கடந்த தேர்தலை விட குறைக்கப்பட்டது ஏன்? பின்னணியில் துரை வைகோ! -
நம்மகிட்ட என்ன இல்லை.. பாமக தொடங்கி 37 வருஷமாச்சு.. ஆனால்.. குமுறி தள்ளிய அன்புமணி -
சபரீசன் கையில் விரைவில் திமுக.. அப்படியே ஆந்திரா ஸ்டைல்.. அணுகுண்டை வீசிய அஇஅதிமுக உதயகுமார் -
அண்ணா ஆட்சி ஏன் சிறப்பு? என்ன சாதித்தார் அவர்? 1967க்கு பிறகான தரமான சம்பவங்கள் இதோ..! -
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
அரசியல் வரலாறு: உலகத் தமிழ் மாநாட்டில் ஊழல்? அண்ணா மீது புகார்! சட்டசபையில் நடந்த காரசார விவாதம்! -
Dindigul: திண்டுக்கல் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு? திமுகவில் ஆர்வம் காட்டும் புதுமுகங்கள்! -
தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்! -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி!












Click it and Unblock the Notifications