ஓட்டுக்கு ரூ.2000..? செய்தியாளர்களை தள்ளிவிட்ட தவெக நிர்வாகி.. காரில் எஸ்கேப் ஆன எம்.எல்.ஏ!

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் மேற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ லட்சுமணன், தேர்தலுக்கு முன் ஓட்டுக்கு ரூ.2,000 வழங்கியதாக அக்கட்சியின் ஓமலூர் வேட்பாளர் அதியமான் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்திருந்தார். இதுகுறித்து எம்.எல்.ஏ லட்சுமணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயன்றபோது, தவெக நிர்வாகிகள் செய்தியாளர்களை தள்ளிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மேற்கு தொகுதியில் தவெக வேட்பாளராக போட்டியிட்ட லட்சுமணன் வாக்காளர்களுக்கு ரூ.2,000 கொடுத்து தான் வெற்றி பெற்றார் என்றும், அதுதான் தனது வெற்றியை பாதித்தது என்றும் அதே கட்சியைச் சேர்ந்தவரும், ஓமலூர் சட்டமன்றத் தொகுதியின் தவெக வேட்பாளருமான அதியமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Reporters Jostled While Seeking Response from TVK MLA Lakshmanan on Cash-for-Votes Charge

பணபலத்தை வீழ்த்தி 108 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியமைத்துள்ளதாக தவெகவினர் பெருமையாகக் கூறி வருகின்றனர். தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் தவெக ஜெயித்ததாக, திருச்சி கிழக்கு தொகுதியில் அண்மையில் வாக்காளர்களைச் சந்தித்தபோது அக்கட்சியின் தலைவர் விஜய் பெருமிதத்துடன் பேசியிருந்தார். இந்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவரே சேலம் மேற்கு தொகுதி தவெக வேட்பாளர் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தார் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டம், ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் அதியமான். இவர், சமீபத்தில் ஓமலூர் தொகுதியில் பணியாற்றிய தவெக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "ஓமலூர் தொகுதியில் நாம் வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஓமலூர் தொகுதிக்கு அருகில் உள்ள சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட லட்சுமணன், வாக்காளர்களுக்கு ரூ.2 ஆயிரம் கொடுத்தார். இதுவே ஓமலூர் தொகுதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் 10 ஆயிரம் வாக்குகள் வரை நம்மை விட்டு சென்றுவிட்டன" என்று பேசியிருந்தார்.

சேலம் மேற்கு தொகுதி தவெக வேட்பாளர் லட்சுமணன், நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் சுமார் 74 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். இந்த வெற்றி பணம் கொடுத்து கிடைத்ததாக தவெக வேட்பாளர் ஒருவரே கூறியிருப்பதால், இது குறித்து தேர்தல் ஆணையம் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து தவெக எம்.எல்.ஏ லட்சுமணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயன்றபோது, தவெக நிர்வாகிகள் செய்தியாளர்களை அப்புறப்படுத்தினர். செய்தியாளர்களை தவெகவினர் தள்ளிவிட்டு எம்.எல்.ஏவை பேசவிடாமல் காரை எடுக்குமாறு கூறினர். காரின் பின்புற சீட்டில் அமர்ந்திருந்தவர் காரை எடுக்குமாறு ஓட்டுநருக்கு சைகை கொடுத்தார்.

உடனே காரை எடுத்துக்கொண்டு தவெக எம்.எல்.ஏ லட்சுமணன் புறப்பட்டு சென்றுவிட்டார். இதனால் தவெகவினர் - செய்தியாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு பதிலாக செய்தியாளர்களை தடுத்து நிறுத்திய சம்பவத்திற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+