போயஸ் இல்லத்திற்குள் நடந்தது என்ன? குண்டர்களால் மண்டை உடைக்கப்பட்ட நிருபர் கதறல் பேட்டி!
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டிற்குள் தனியார் நிறுவன குண்டர்கள் கட்டையை வைத்து தாக்கியதாக ஆங்கில ஊடக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சென்னை: மறைந்த ஜெயலலிதாவின் வீட்டிற்குள் ஜெ. தீபாவுடன் நடந்த வாக்குவாதத்தை படம்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த குண்டர்கள் செய்தி ஊடக ஒளிப்பதிவாளரையும், செய்தியாளரையும் கடுமையாக தாக்கியதாக பாதிக்கப்பட்ட செய்தியாளர் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று காலை போயஸ் கார்டனுக்குள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒருபக்கம் பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் தீபாவுடன் ஆங்கில செய்தி ஊடகமான ரிபப்ளிக் செய்தி சேனலின் செய்தியாளர் சஞ்சீவும், ஒளிப்பதிவாளரும் சென்றுள்ளனர்.
குண்டர்கள் தாக்குதல்
வேதா இல்லத்திற்குள் சென்ற தீபாவை அங்கிருந்த தனியார் நிறுவன பாதுபாப்பு குண்டர்கள் தீபாவுடன் வாக்குவாதம் செய்ததை அவர்கள் படம்பிடித்துள்ளனர். முதலில் இதை படம்பிடித்ததை வேடிக்கை பார்த்த குண்டர்கள் பின்னர் சஞ்சீவையும், ஒளிப்பதிவாளரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
வேடிக்கை பார்த்த காவல்துறை
உருட்டுக்கட்டையால் அடித்ததோடு, மண்டையில் ரத்தக்காயம் வரும் அளவிற்கு கொலைவெறியுடன் நடந்துள்ளனர். ஆனால் இந்த சம்பவங்கள் நடந்த போதும் காவல்துறையினர் வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளனர்.
தரதரவென இழுத்தனர்
சிறிது நேரத்தில் கேமரா,நேரலை செய்யும் கருவி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்ததோடு போயஸ் கார்டன் வெளிவட்ட சாலை வரை இழுத்துவிட்டு சென்றுள்ளனர்.
வீடியோவை பாருங்கள்
தாக்கப்பட்ட செய்தியாளர் இந்தச் சம்பவத்தைவிவரிக்கும் காட்சிகள் ஒன் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. மேலும் அங்கு குண்டர்கள் நடந்து கொண்ட விதம் குறித்தும் சஞ்சீவ் பல அதிரடித் தகவல்களைத்தெரிவித்துள்ளார். முழு விவரங்களை தெரிந்து கொள்ள வீடியோவை பாருங்கள்.