போயஸ் இல்லத்திற்குள் நடந்தது என்ன? குண்டர்களால் மண்டை உடைக்கப்பட்ட நிருபர் கதறல் பேட்டி!
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டிற்குள் தனியார் நிறுவன குண்டர்கள் கட்டையை வைத்து தாக்கியதாக ஆங்கில ஊடக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சென்னை: மறைந்த ஜெயலலிதாவின் வீட்டிற்குள் ஜெ. தீபாவுடன் நடந்த வாக்குவாதத்தை படம்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த குண்டர்கள் செய்தி ஊடக ஒளிப்பதிவாளரையும், செய்தியாளரையும் கடுமையாக தாக்கியதாக பாதிக்கப்பட்ட செய்தியாளர் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று காலை போயஸ் கார்டனுக்குள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒருபக்கம் பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் தீபாவுடன் ஆங்கில செய்தி ஊடகமான ரிபப்ளிக் செய்தி சேனலின் செய்தியாளர் சஞ்சீவும், ஒளிப்பதிவாளரும் சென்றுள்ளனர்.

குண்டர்கள் தாக்குதல்
வேதா இல்லத்திற்குள் சென்ற தீபாவை அங்கிருந்த தனியார் நிறுவன பாதுபாப்பு குண்டர்கள் தீபாவுடன் வாக்குவாதம் செய்ததை அவர்கள் படம்பிடித்துள்ளனர். முதலில் இதை படம்பிடித்ததை வேடிக்கை பார்த்த குண்டர்கள் பின்னர் சஞ்சீவையும், ஒளிப்பதிவாளரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

வேடிக்கை பார்த்த காவல்துறை
உருட்டுக்கட்டையால் அடித்ததோடு, மண்டையில் ரத்தக்காயம் வரும் அளவிற்கு கொலைவெறியுடன் நடந்துள்ளனர். ஆனால் இந்த சம்பவங்கள் நடந்த போதும் காவல்துறையினர் வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளனர்.

தரதரவென இழுத்தனர்
சிறிது நேரத்தில் கேமரா,நேரலை செய்யும் கருவி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்ததோடு போயஸ் கார்டன் வெளிவட்ட சாலை வரை இழுத்துவிட்டு சென்றுள்ளனர்.
வீடியோவை பாருங்கள்
தாக்கப்பட்ட செய்தியாளர் இந்தச் சம்பவத்தைவிவரிக்கும் காட்சிகள் ஒன் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. மேலும் அங்கு குண்டர்கள் நடந்து கொண்ட விதம் குறித்தும் சஞ்சீவ் பல அதிரடித் தகவல்களைத்தெரிவித்துள்ளார். முழு விவரங்களை தெரிந்து கொள்ள வீடியோவை பாருங்கள்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications