ஆர்.கே நகர் பணப் பட்டுவாடா.. தேர்தல் அதிகாரிகள் அவசர ஆலோசனை.. ரத்தா அல்லது வேறு ஏதேனுமா?
ஆர்.கே நகரில் அதிகரித்து வரும் பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
Recommended Video

சென்னை : ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா குற்றச்சாட்டு அதிகரித்து வருவதால், தேர்தல் அதிகாரிகள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் தேர்தல் நடக்குமா என்கிற கேள்வி எழுந்து உள்ளது.
ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

தேர்தல் ஆணையத்தின் பலத்த கண்காணிப்பையும் மீறி, தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. இதுவரை பல இடங்களில் பணப்பட்டுவாடா நடந்து உள்ளதாகவும் இதற்கு போலீஸாரும் உடந்தையாக இருந்துள்ளதாக, தி.மு.க சார்பில் தேர்தல் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க மற்றும் டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. நேற்று பணப்பட்டுவாடா புகார் அளிப்பதற்காக கட்சிக்காரர்கள், பொதுமக்கள் என கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் பலரும் குவிந்ததால், அங்கு அதிக எண்ணிகையில் புகார் பதிவாகி உள்ளது.
இந்நிலையில், ஆர்.கே நகருக்கு சிறப்பு தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ள பத்ரா, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியோடு தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் மற்ற தேர்தல் அதிகாரிகள், பார்வையாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்ததாக கூறி ரத்து செய்யப்பட்டது. இதனால், தற்போது பணப்பட்டுவாடா புகார் குறித்து தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதால் தேர்தல் ரத்தாகுமோ என்கிற கேள்வி எழுந்துள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications