குன்றத்தூர் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு... அதிர வைக்கும் வீடியோ
குன்றத்தூர் அருகே கணவருடன் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகை பறிக்கப்பட்ட அதிர்ச்சி வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
பூந்தமல்லி: சென்னை பூந்தமல்லியை அடுத்த குன்றத்தூரில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகை பறிக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
குன்றத்தூரை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மனைவி ஜெயஸ்ரீ (57). இருவரும் நேற்று மாலை அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் நடந்து வந்த மர்ம நபர் ஜெயஸ்ரீயின் அருகில் சென்று கழுத்தில் அணிந்து இருந்த 5 சவரன் நகையை பறித்துக்கொண்டு ஓடினார். இதில் ஜெயஸ்ரீ நிலை தடுமாறி கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது.
குன்றத்தூர் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு... அதிர வைக்கும் வீடியோ https://t.co/CLcIWEwQGw pic.twitter.com/Js730pCYGC
— Oneindia Tamil (@thatsTamil) February 11, 2018
இதையடுத்து அந்த பகுதி மக்கள் விரட்டி சென்றனர். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர்கள் அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக குன்றத்தூர் போலீஸார் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை பிடிக்க முயற்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications