பகல் கொள்ளை அடிப்பவர்களுக்கு நடுவே இப்படியும் ஒரு பஸ் டிராவல்ஸ்: சல்யூட் அடிக்கலாமே!
சென்னை: வெள்ளத்தை காரணமாக வைத்து பகல் கொள்ளை அடிக்கும் நபர்களுக்கு மத்தியில் ரதி மீனா டிராவல்ஸ் தனது இரக்கத்தால் மக்கள் மனதில் உயர்ந்த இடத்தை பிடித்துள்ளது.
நேற்று முன்தினம் சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டி வெள்ளக்காடானது. இதனால் சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு செல்ல வேண்டிய பேருந்துகள் ரத்து செய்யப்பட்டு கோயம்பேட்டில் நிறுத்தி வைக்கப்பட்டன.

பேருந்துகள் திடீர் என்று ரத்து செய்யப்பட்டதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சிதம்பரம் செல்லவிருந்த 25 பயணிகள் குழந்தைகளுடன் செய்வது அறியாது தவித்தனர். அவர்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள ரதிமீனா டிராவல்ஸை அணுகி சிதம்பரத்திற்கு ஒரு பேருந்தை இயக்குமாறு கோரிக்கை விடுத்தனர். அவர்களின் பரிதாப நிலையை பார்த்த அலுவலக அதிகாரிகள் உயர் அதிகாரிகளிடம் பேசி பேருந்தை இயக்க அனுமதி பெற்றனர்.
இதையடுத்து மாலை 4 மணிக்கு 25 பேருடன் ரதி மீனா பேருந்து சிதம்பரத்திற்கு கிளம்பியது. மகாபலிபுரம் சாலை வெள்ளக்காடானதால் பேருந்துகள் எல்லாம் திண்டிவனம் - செங்கல்பட்டு சாலைக்கு திருப்பிவிடப்பட்டது. இதனால் ரதி மீனா பேருந்து செங்கல்பட்டு சென்று அங்கிருந்து திண்டிவனத்தை அடைய இரவு 10 மணி ஆனது.
வெள்ளத்தை பார்த்து பயத்தில் இருந்த பயணிகளை பேருந்து ஓட்டுநர்கள், கிளீனர்கள் தேற்றியதோடு மட்டும் அல்லாமல் குழந்தைகளுக்கு பால், பிஸ்கெட் பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்களை வாங்கிக் கொடுத்துள்ளனர்.
மேலும் பயணிகளை உணவகத்திற்கு அழைத்துச் சென்று நிறுவன செலவில் உணவு வாங்கிக் கொடுத்துள்ளனர். உணவுக்கு பிறகு கிளம்பிய பேருந்து புதுச்சேரி, கடலூர் வழியாக சென்று இரவு 1 மணிக்கு சிதம்பரத்தை அடைந்துள்ளது.
வெள்ளத்தை காரணம் காட்டி ஆம்னி பேருந்துகள் பகல் கொள்ளை அடிக்கையில் ரதி மீனா டிராவல்ஸ் சென்னையில் இருந்து சிதம்பரம் செல்லும் கட்டணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு பயணிகளுக்கு உணவும், தைரியமும் கொடுத்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளது பாராட்டுக்குரியது.
-
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் பெரிய ரிங் ரோட்டில்.. வருது ராட்சச ரயில் பாதை.. தமிழக அரசு கிரீன் சிக்னல்! தரமான முடிவு -
15 வருட ஏக்கம்! சென்னை வேளாங்கண்ணி இடையே நேரடி ரயில் சேவை! பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரயில்வே -
சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்.. ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை.. வாகன ஓட்டிகள் கவனம் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
சென்னை தேர்தல் களத்தில் பிரியாணி கிடையாது? செலவினப் பட்டியலில் விடுபட்டதால் குழப்பம்! -
முடங்கிய பணிகள்.. கிளாம்பாக்கம் மெட்ரோவிற்கு ‘பச்சைக்கொடி’ காட்டாத மத்திய அரசு.. எல்லாம் போச்சு -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி!












Click it and Unblock the Notifications