மதுரை விமான நிலையத்தின் கழிப்பறையில் கட்டு கட்டாக கிடந்த பணம்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை விமான நிலைய நிலையத்தின் கழிப்பறையில் கட்டு கட்டாக கிடந்த பணம் மீட்கப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலையத்தில் நேற்று காலை விமான நிலைய ஊழியர் சண்முகம், கழிவறையை சுத்தம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது, ஆயிரம் ரூபாய் தாள்கள் கொண்ட 2 கட்டுகள் அங்கு கேட்பாரற்று கிடந்துள்ளன. அதன் அருகே கருப்பு கலர் பவுடர் பாக்கெட் ஒன்றும் கிடந்துள்ளது.

Rs. 2.2 Lakh recovered inside the Toilet of Madurai Airport

இதை கண்ட சண்முகம், அந்த பணத்தை எடுத்து விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அதில், ரூ.2,20,000 இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த பணம், பெருங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. பணத்தை போட்டுச் சென்ற நபர் யார் என்று தெரியாத நிலையில், எதற்காக அந்த நபர் பணத்தை போட்டுவிட்டுச் சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+