அதிமுக கரைவேட்டிக்குள் பதுக்கப்பட்ட ரூ. 50 லட்சம்... மூடி மறைத்தாரா கலெக்டர்?
திருப்பரங்குன்றம் தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அதிமுக கரை வேட்டியில் மறைத்து கொண்டு சென்ற 50 லட்சம் ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மதுரை: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அதிமுகவினர் கொண்டு சென்ற 50 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
மதுரை: தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சூடு பிடிக்கத்தொடங்கியிருக்கிறது. வழக்கம் போல தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர், பணப்பட்டுவாடாவை தடுக்கும் நோக்கில் வாகன சோதனையை துரிதபப்டுத்தி வருகின்றனர்.

கடந்த வாரம், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு சுமார் 50 லட்ச ரூபாயை கொண்டு செல்ல முயற்சித்தபோது அவரை மடக்கியது பறக்கும் படை. மதுரை கலெக்டரிடம் அந்த சூட்கேஸ் ஒப்படைக்கப்பட்டது.
பத்திரிகையாளர் முன்னிலையில் அந்த சூட்கேஸ் திறக்கப்பட்டபோது, அதிமுக கரை வேட்டிகளுக்கு அடியில் அந்த 50 லட்சமும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதிமுக கரைவேட்டி இருப்பதைப் பார்த்ததும் பதறிவிட்டார் கலெக்டர். அதனை பத்திரிகையாளர்கள் படம் பிடித்துவிடாதபடிக்கு பதறிவிட்டார். அத்துடன், பிடிக்கப்பட்ட பணம் அதிமுக கரை வேட்டியில் சுற்றி வைக்கப்பட்டிருந்தது என செய்தி போட்டு விட வேண்டாம் என கேட்டுக்கொண்டிருக்கிறார் கலெக்டர்.
அந்த செய்தி அதிமுக பிரமுகர் ஒருவரிடமிருந்து கணக்கில் காட்டப்படாத பணத்தை பறக்கும் படையினர் பிடித்தனர் என்று பொத்தாம் பொதுவாக மட்டும் செய்தி வெளியானது என்கிறார்கள் பறக்கும் படையினர். கரை வேட்டியை மூடி மறைத்தாராம் கலெக்டர்.












Click it and Unblock the Notifications