மூட்டை மூட்டையாக சாலையோரம் கிடந்த கிழிந்த ரூபாய் நோட்டுக்கள்.. சிபிசிஐடி விசாரணை
கடலூர்: பண்ருட்டி அருகே சாலையோரத்தில் 500 ரூபாய் நோட்டுக்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு வீசப்பட்டிருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கோழிப்பாக்கம் கிராமத்தின் சாலையோரம் நேற்று மாலை 1000, 500, 100 ரூபாய் நோட்டுகள் பரவிக் கிடப்பதாக அப்பகுதி மக்களிடையே தகவல்கள் பரவியது. ஊர்மக்கள் சென்று பார்த்தபோது ரூபாய் நோட்டுக்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடந்தது. இதனை சிலர் வீட்டுக்கு அள்ளிச் சென்றனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பண்ருட்டி போலீசார் விரைந்து சென்று அதனை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருப்பு பணமா, கள்ள நோட்டுகளாக இருக்குமா என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அண்மையில் சேலத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் கொண்டு செல்லப்பட்ட வங்கிப் பணம் ரூபாய் நோட்டுகளில் 5 கோடி அளவுக்கு கொள்ளைடியக்கப்பட்டது. அந்த பணமாக இருக்குமா என போலீசார் பலவித கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி போலீசாரும் புதிய கோணத்தில் விசாரணையை துவக்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications