கடைசி வரை கைது செய்யாத போலீஸ்.. காமெடியன் எஸ்.வி சேகருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன்
போலீஸ் தேடி வந்த எஸ்.வி.சேகர் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.
Recommended Video
சென்னை: நடிகர் எஸ்வி சேகருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. போலீஸ் அவரை கடைசி வரை கைது செய்யவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையை சேர்ந்த பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக் கொடுத்தது பிரச்சனை ஆனது. இதில் பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார்.
இதனால் அவர் மீது வழக்கு பதியப்பட்டது. உடனே சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத் தாக்கல் செய்தார்.
கிடையாது
ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கவில்லை. அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜாமீன் கேட்டார். அதில் விசாரணை நடந்தது.
போலீஸ் அலட்சியம்
உச்ச நீதிமன்றமும் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.அத்துடன் அவரை கைது செய்யலாம் என்றும் கூறியது. ஆனால் தமிழக போலீஸ் இன்னும் அவரை கைது செய்யாமல் இருந்து வருகிறது.
போலீஸ் பாதுகாப்பு
அவர் சந்தோசமாக போலீஸ் பாதுகாப்புடன் சென்னையில் சுற்றி வருகிறார். இந்த நிலையில் பல வழக்குகளில், அவர் மீது விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையில் ஆஜராகும்படி சேகருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆஜரானார்
இந்த நிலையில் எஸ்.வி.சேகர் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார். நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் அவர் இன்று ஆஜராகினார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜரானார் எஸ்வி சேகர்