தென்காசி அருகே சமத்துவபுரம் வீடுகள் இடியும் அபாயம்.. 50 வீடுகள் சேதம்... இடியும் நிலையில் 15 வீடுகள்
தென்காசி: நெல்லை மாவட்டம் தென்காசி அருகே சமத்துவபுரத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகள் கன மழையால் சேதமடைய ஆரம்பித்துள்ளன. 50 வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில் 15 வீடுகள் இடியும் அபாயத்தில் உள்ளன.
கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பொய்கை ஊராட்சி மன்றப் பகுதியில் உள்ளது சின்ன பனையன் குளம் கிராமம். இங்கு வீடில்லாத ஏழைகளுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மிகவும் பள்ளமான பகுதியில், சமத்துவபுரத்தில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் 150 வீடுகள் கட்டப்பட்டது. இந்த வீடுகள் தாமதமாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்தப் பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்துவருவதால் இங்குள்ள சின்னப் பனையான் குளத்தில் தண்ணீர்வரத்து ஏற்பட்டு குளம் நிரம்பி வழிந்தது. நிலப் பகுதியில் தண்ணீர் நிரம்பியதால் கான்கிரிட் வீடுகளில் சுவர்கள் தானாகவே பெயர்ந்து விழத்தொடங்கின. தரமானதாக வீடுகள் இல்லாததால் மக்கள் அச்சத்தோடு கழித்துவருகின்றர்.
மேலும் குளத்தில் இருந்து வெளியேறும் அனைத்து நீரும் அப்பகுதியில் தேங்கிய நிலையில் நேற்று இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக குளத்தின் கரைப்பகுதியில் உடைப்பு ஏற்ப்பட்டது. குளத்தில் இருந்து வெளியேறிய நீர் சுமார் 50க்கும் மேற்ப்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.
மழைநீர் வீடுகளை சூழ்ந்ததால் சுமார் 15 வீட்டு சுவர்களில் தானாகவே வெடிப்பு விழுந்தது. தரைத்தளம் மண்ணுக்குள் சுமார் 1அடி புதைந்தும் போனது. இதுகுறித்து சமத்துவபுரம் பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் சொல்லியும் இதுவரை யாரும் வந்து குளத்தையோ, வீடுகளையோ பார்வையிட்டு இந்த மக்களை பாதுகாப்பான பகுதிக்கு இடமாற்றம் செய்யவோ, பாதுகாப்பு அளிக்கவோ வரவில்லை.
மேலும் உடைந்த குளத்தை பொதுப் பணித்துறை அதிகாரிகள் வந்து பார்க்கவில்லை. அதனால் தாங்களாகவே மணல் மூட்டைகளை கொண்டு வந்து குளத்தின் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தண்ணீருக்குள் தத்தளிக்கும் தங்களை அரசு பாதுகாக்க வேண்டும் என்றும் இரவில் வீடுகளுக்குள் விஷ ஜந்துக்கள் நுழைவதாகவும், தாமதமின்றி அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடு்க்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications