For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருமாவளவனுக்கு தேனீ கொட்டியதே நலம் விசாரித்தாரா கருணாநிதி...?: சரத்குமார் கேள்வி

Google Oneindia Tamil News

பெரம்பலூர்: கூட்டணிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான திருமாவளவனுக்கு தேனீ கொட்டியதற்கு திமுக தலைவர் கருணாநிதி நலம் விசாரித்ததாகத் தெரியவில்லை. இது தான் கூட்டணித் தர்மமா? எனக் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளார் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.

லோக்சபா தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடாத போதும் அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேர்கொண்டு வருகிறார் அக்கட்சியின் தலைவர் சரத்குமார். அதன்படி, நேற்று சிதம்பரம் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளார் சந்திரகாசியை ஆதரித்து அரியலூர் தொடங்கி திருமானூர், கீழப்பழுர் உள்ளிட்ட ஊர்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நாடகம் போடும் காங்....

நாடகம் போடும் காங்....

அலைவரிசை ஊழலில் சிக்கிய திமுகவும் அதற்கு துணை போன் காங்கிரஸும் தேர்தலையொட்டி, சேர்ந்தும் விலகியும் நாடகம் போடுகின்றன.

விழிப்புடன் இருக்கணும்...

விழிப்புடன் இருக்கணும்...

வாக்காளர்கள் விழிப்புடன் இவர்களை கவனித்து விலக வேண்டிய நேரம் இது.

கூட்டணி பெருமை பேசும் திமுக்வினர்....

கூட்டணி பெருமை பேசும் திமுக்வினர்....

தங்களுடைய கூட்டணி பற்றி பெருமையாக திமுகவினர் பேசுகின்றனர். கூட்டணிக்கட்சியின் பிரச்சாரத்திலிருந்த ஒரு தலைவரை தேனீக்கள் கடித்ததும், அவர் விழுந்து அடிபட்டதுமாக செய்திகள் வெளியாகியது.

ஏன் விசாரிக்கவில்லை....

ஏன் விசாரிக்கவில்லை....

ஆனால், திருமாவளவனை கருணாநிதி விசாரித்ததாக ஒரு செய்தி கூட வரவில்லை. இது தான் அவர்கள் மெச்சிக் கொள்ளும் கூட்டணியா..?' என இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
AISMK president Sarathkumar questions that why didn't Karunanithi asked Thirumavalavan about his health.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X