மது விலக்குக்காக உயிரிழந்த சசிபெருமாளுக்கு கள் படையல்... வழக்கு தொடரப்போவதாக மகன் முடிவு
ஈரோடு : மதுவிலக்குக்காக போராடி உயிரிழந்த சசி பெருமாள் படத்திற்கு கள் வைத்து படையிலிட்ட தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி மீது வழக்கு தொடரப்பபோவதாக சசிபெருமாள் மகன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு ஆக்ஸ்போர்டு ஹோட்டலில் சனிக்கிழமை இந்நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையில் மண் கலயத்தில் கள், பனம்பழம், வாழை, தேங்காய் உள்ளிட்டவை படையலாக வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களுக்கு நல்லசாமி அளித்த பேட்டியில் கூறியதாவது...
சங்க காலத்தில் மன்னர்கள், போரில் வீர மரணம் அடைந்தவர்கள், முதியவர்கள் உள்ளிட்டோருக்கு கள் படையல் வைக்கும் மரபு இருந்தது. அதற்கான ஆதாரம் புறநானூற்று பாடல்களில் இடம்பெற்றுள்ளன.
அதியமானும், ஔவையாரும் கள் அருந்தியதற்கான சான்றும், அதியமான் இறந்த பினனர் அவரது சமாதியில் நடுகல் நட்டி அதன் அருகே கள், மயில்தோகை உள்ளிட்டவற்றை படையலாக வைத்து வழிபட்டதற்கான சான்றும் புறனானூற்றுப் பாடல்களில் இடம்பெற்றுள்ளன.
இதை முன்னுதாரணமாக கொண்டு தமிழர் மரபுபடி, காந்தியவாதி சசிபெருமாளுக்கு கள் படையல் வழிபாடு நடத்தினோம். தொடக்கத்தில் கள்ளுக்கு எதிரான நிலைப்பாட்டை சசிபெருமாள் கொண்டிருந்தாலும், பின்னர் எங்களின் வாதத்தில் இருக்கும் உண்மையை புரிந்துகொண்டு கள், உணவின் ஒரு பகுதி என்பதை ஏற்றுக்கொண்டார்.
வெளிநாட்டு மதுவகைகள் மற்றும் டாஸ்மாக் மதுக்களுக்கு எதிராக மட்டும் தான் சசிபெருமாள் போராட்டம் நடத்தினார். கள்ளுக்கு அனுமதி கோரி கன்னியாகுமரி முதல் சென்னை வரை 2 ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய பேரணியிலும், 21.1.2015-ல் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த உண்ணாவிரத அறப்போராட்டத்தில் எங்களுடன் சசிபெருமாள் பங்கேற்றார். ஆகவே, கள் இயக்க போராளியாக திகழ்ந்த அவருக்கு கள் படையல் வழிபாடு நடத்தி வீரவணக்கம் செலுத்தியுள்ளோம் என்றார்.
இந்நிலையில் மது விலக்குக்கு எதிராக போராடிய தனது தந்தை சசி பெருமாளுக்கு கள் வைத்து படையிலிட்ட நல்லசாமி மீது வழக்கு தொடரப்போவதாக சசிபெருமாள் மகன் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications