காணொலி காட்சிக்கு கர்நாடக அரசு அனுமதிக்கவிட்டால்.. சசிகலா நேரில் ஆஜராக வேண்டும்... நீதிபதி உத்தரவு
அன்னிய செலாவணி வழக்கில் காணொலி காட்சி மூலம் சசிகலாவை விசாரிக்க கர்நாடக அரசு அனுமதிக்கவில்லை எனில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார்.
சென்னை: அன்னிய செலாவணி வழக்கில் காணொலி காட்சி மூலம் சசிகலாவை விசாரிக்க கர்நாடக அரசு அனுமதிக்கவில்லை எனில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார்.
ஜெ.ஜெ.டிவிக்கு வெளிநாடுகளில் இருந்து கடந்த 1996-97-ஆம் ஆண்டு ஒளிபரப்பு சாதனங்கள் கொள்முதல் செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுடன் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சசிகலா, பாஸ்கரன் மற்றும் ஜெ.ஜெ. டிவி ஆகியவற்றின் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கானது சென்னை எழும்பூர் அல்லிக்குளம் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாஸ்கரன் ஆஜரானார். அதைத் தொடர்ந்து அவர் மீது குற்றச்சாட்டு பதிவானது. இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சசிகலாவிடம் விசாரணை நடத்தி குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி ஜாகீர் உசேன் தெரிவித்தார்.
அப்போது ஆஜரான சசிகலா தரப்பு வழக்குரைஞர், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளதாலும், அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாலும் அவரை காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த அனுமதி கோரினார்.
இந்த வழக்கானது இன்று மாலை 4 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலாவிடம் வரும் 2 வாரங்களுக்குள் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அதற்கு பெங்களூரு சிறை நிர்வாகம் ஒப்புதல் தர வேண்டும்.
கர்நாடக உள்துறை செயலாளரும் சான்றிதழ் வழங்கினால்தான் காணொலி மூலம் விசாரணை நடத்தமுடியும். ஒரு வேளை காணொலி காட்சிக்கு கர்நாடகா அரசு அனுமதி அளிக்காவிடில், அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications