ஆளுநர் ஏன் இன்னும் கூப்பிடலை.. பீதியடைந்த சசிகலா எம்பிக்களுடன் பரபர ஆலோசனை
போயஸ் கார்டனில் சசிகலா தலைமையில் அதிமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை: போயஸ்கார்டன் இல்லத்தில் சசிகலா தலைமையில் அதிமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்காதது குறித்து விவாதித்து வரும் சசிகலா டெல்லியில் எம்பிக்கள் போராட்டம் நடத்த வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்கக்கோரி சசிகலா ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து நேற்று கோரிக்கை விடுத்தார். எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் அவர் ஆளுநரிடம் வழங்கினார்.

ஆதரவுக் கடிதம் கொடுத்து 20 மணி நேரத்துக்கு மேலாகியும் இதுவரை ஆளுநர் தரப்பில் இருந்து சசிகலாவுக்கு எந்த அழைப்பும் வரவில்லை.
இதனால் பீதியடைந்துள்ள சசிகலா மற்றும் மன்னார்குடி கும்பல் அதிமுக எம்பிக்களுடன் போயஸ்கார்டனில் உள்ள வீட்டில் ஆலோசனை நடத்தி வருகின்றது. இதில் எம்பிக்கள் நவநீதகிருஷ்ணன், வைத்தியலிங்கம், ஜெயவர்தன், அற்புதன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட எம்பிக்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில், ஆதரவு கடிதம் கொடுத்தும் ஆளுநர் ஏன் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கவில்லை என சசிகலா மற்றும் மன்னார்குடி கும்பல் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக டெல்லியில் எம்எல்ஏக்கள் அணிவகுப்பு நடத்தலாமா என்றும் அவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications