அதிமுக மகளிர் அணிச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலா புஷ்பா எம்.பி. நீக்கம்
சென்னை: அதிமுக மகளிர் அணிச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலா எம்.பி. விடுவிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சியின் மேயராக இருந்த சசிகலா புஷ்பா அப் பதவியை ராஜினாமா செய்த பின்னர் அதிமுகவின் ராஜ்யசபா எம்.பி.ஆனார். மேலும் அதிமுகவின் மகளிர் அணிச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில் அ.தி.மு.க மகளிரணி செயலாளர் பொறுப்பிலிருந்து சசிகலா புஷ்பா விடுவிக்கப்படுவதாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அந்த பதவிக்கு கைத்தறித் துறை அமைச்சர் எஸ். கோகுல இந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலளர் பதவியில் இருந்து நாஞ்சில் சம்பத் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications