For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ.சிகிச்சை பெறும் அப்பல்லோவில் சசிகலா குடும்பத்தினர் !

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுடன் அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக தங்கியிருந்த சசிகலா, முதல் முறையாக நேற்று இரவு மருத்துவமனையை விட்டு வெளியே கிளம்பி சென்றுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22 ஆம் தேதி உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தோழி சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் அருகில் இருந்து கவனித்து வருகிறார்கள். வேறு யாருக்கும் ஜெயலலிதாவுடன் இருக்க அனுமதி மறுக்கப்பட்டது.

sasikala's family in apollo hospital

தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையில் தங்கியிருந்த சசிகலா, கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து வெளியே காரில் புறப்பட்டுச்சென்றார். அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதையடுத்து தினமும் இரவு 8 மணிக்கு , அப்போலோ மருத்துவமனையில் இருந்து வெளியேறும் சசிகலா, ஒரு மணி நேரத்திற்குப் பின் மீண்டும் வருகிறாராம். நேற்றும் இந்த நிகழ்வு தொடர்ந்தது.

இந்நிலையில் நேற்று அப்பல்லோ மருத்துவமனையில் டி.டி.வி. தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர், சசிகலாவின் அண்ணன் மகள் பிரபாவதி, சசிகலா வழக்கறிஞர், திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் ஆகியோர் வந்து சென்றனர்.

ஜெய் ஆனந்த் இரவு 09.05 மணி அளவில் காரில் வெளியே சென்றார். பின்னர் 9.58க்கு காரில் உள்ளே சென்றார். நீலநிற சட்டை போட்ட ஒருவரை காரில் இருந்து இறக்கிவிட்டுவிட்டு 10 மணிக்கு மீண்டும் வெளியே சென்றார்.

English summary
members of the family of Sasikala Natarajan in apollo hospital
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X