For Daily Alerts
Just In
வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சி: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சசிகலா வழிபாடு
சென்னை: வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சியை ஒட்டி சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சசிகலா வழிபாடு நடத்தினார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலைமைச்சருமான ஜெயலலிதாவுடன் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப் பட்ட சசிகலா தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளார்.
ஜெயலலிதா போலவே பெங்களூரு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த பிறகு பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து வந்தார் சசிகலா. இந்நிலையில், நேற்று புத்தாண்டு தினத்தோடு, வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சியும் சேர்ந்து வந்தது.
இதையொட்டி, நேற்று காலை 5.30 மணி அளவில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினார் சசிகலா.
Comments
English summary
Sasikala, the close aid of former chief minister Jayalalitha has worshiped in a temple on new year day
Story first published: Friday, January 2, 2015, 10:08 [IST]