இயக்குநர் சசிகுமார் உறவினர் தூக்கிட்டு தற்கொலை
இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 40 வயது நிரம்பிய இவர் அபிராமபுரத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
பிரபல இயக்குனர் சசிகுமாரின் மைதுனரான அசோக் என்பவர் இன்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இந்த தற்கொலை சம்பவம் அபிராமபுரத்தில் இருக்கும் அவரது வீட்டில் நடந்து இருக்கிறது.

கடன் பிரச்னை காரணமாக அசோக் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே சமயத்தில் அசோக்குமார் தற்கொலை பற்றி புகார் தர காவல்நிலையம் சென்றுள்ளார் இயக்குநர் சசிகுமார். வளசரவாக்கம் காவல்நிலையத்திற்கு சசிகுமாருடன் இயக்குநர்கள் பாலா, சமுத்திரக்கனி, அமீரும் ஆகியோரும் சென்றுள்ளனர்.
தற்போது அசோக்கின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications