சிறை தண்டனை அனுபவிக்கும் சசிகலா எந்த கட்சிக்கும் இனி பொதுச்செயலராகவே முடியாது?
தண்டனை பெற்ற கைதிகள் அரசியல் கட்சிகளை நடத்துவதற்கு விரைவில் உச்சநீதிமன்றம் தடை விதிக்க உள்ளது.
Recommended Video

சென்னை: ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகள் அரசியல் கட்சிகளை நடத்த உச்சநீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று சசிகலா, லாலு பிரசாத் யாதவ் போன்றோர் அரசியல் கட்சிகளை நடத்த முடியாத நிலை விரைவில் உருவாகும் என தெரிகிறது.
அதிமுகவின் பொதுச்செயலராக சசிகலாவை நியமித்தனர் அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள். ஆனால் அதிமுக கட்சி விதிகளின்படி பொதுச்செயலாளர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
பின்னர் சசிகலாவின் நியமனத்தை ரத்து செய்து ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என நியமிக்கப்பட்டனர். தற்போது அதிமுக(அம்மா) அணியின் பொதுச்செயலாளராக சசிகலா, துணைப் பொதுச்செயலாளராக தினகரன் இருந்து வருகின்றனர்.

தண்டனை கைதி சசிகலா
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார். தினகரன் மீது அன்னிய செலாவணி மோசடி உட்பட பல வழக்குகள் விசாரணையில் இருக்கின்றன.

தண்டனை கைதிகளும் உச்சநீதிமன்றமும்
இந்நிலையில் பொதுநலன் வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம், தண்டனை பெற்ற கைதிகள் அரசியல் கட்சிகளை நடத்த கூடாது என கருத்து தெரிவித்துள்ளது. அதாவது, தண்டனை பெற்ற ஒருநபர் தேர்தலில் போட்டியிட முடியாது. அப்படியான நிலையில் அவர் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கி தன்னுடைய வேட்பாளர்களை தேர்தலில் போட்டியிட வைக்கிறார்.

தண்டனை கைதிகளும் அரசும்
தண்டனை பெற்ற கைதிகள் பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகள் போன்ற மனிதநேய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஆனால் ஒரு அரசாங்கத்தை நடத்துவது என்கிற போது வேறான ஒன்றாகும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

பொதுச்செயலராக முடியாது
இதனடிப்படையில் தண்டனை பெற்ற சசிகலா போன்ற கைதிகள் இனி அரசியல் கட்சிகளில் பொறுப்பு வகிக்கவும் உச்சநீதிமன்றம் விரைவில் தடை விதிக்க வாய்ப்புள்ளது. தேசிய அளவில் லாலு பிரசாத், ஓம் பிரகாஷ் சவுதாலா போன்றோருக்கும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து நெருக்கடியைத் தரும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications