புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை தொடங்கிய புதிய ஹெல்ப்லைன்
புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித் துறை தொடர்பான அனைவரின் சந்தேகங்களுக்கும் பதில் அளிக்க ஒரு புதிய ஹெல்ப்லைன் தொலைபேசி சேவையைத் தொடங்கியுள்ளது.
புதுச்சேரி: புதுச்சேரி மாநில பள்ளிக் கல்வித் துறை பள்ளிக் கல்வி தொடர்பான சந்தேகங்களைத் தீர்க்க ஒரு புதிய ஹெல்ப்லைன் தொலைபேசி சேவையை இன்று தொடங்கியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் புகுத்தப்பட்டு வருகிறது. இவையெல்லாம் தொழில்நுட்பம் மற்றும் கல்வித் துறை விரிவடைந்ததன் காரணமாக கல்வித் துறையில் பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், புதுச்சேரி அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பள்ளிக் கல்வி சம்பந்தமான சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில், புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித் துறை இன்று சிறப்பு ஹெல்ப்லைன் வசதியை தொடங்கியுள்ளது. அதன்படி 04132207262 என்ற எண்ணில் அனைத்து வேலை நாட்களிலும் காலை 9.30 முதல் மாளை 5.30 வரை பள்ளிக் கல்வி தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் கேள்வி கேட்டு பதில் தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம் மாணவர்களிடையே பள்ளிக் கல்வி பற்றிய விழிப்புணர்வு ஏற்படும்