காரைக்குடியில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான கண்காட்சி
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் டெல்லி அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

அழகப்பா மெட்ரிக் பள்ளி முதல்வர் குமரன் கணேசன் வரவேற்றார். அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் கண்காட்சியை துவக்கி வைத்தார். கண்காட்சியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் 350க்கு மேல் இடம் பெற்று இருந்தது. மாணவர்கள் காட்சிப்படுத்திய படைப்புகளை பார்வையாளர்களுக்கு விளக்கினர்.

மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு சிவகங்கை மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் திரு. செந்திவேல் முருகன் அவர்கள் தலைமை வகித்தார். தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் மாரிமுத்து அவர்கள், சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலர் மாணிக்கம் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கண்காட்சியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி அளவில் முதல் பரிசு காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவி செல்வி.சபானாவிற்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சண்முகநாதன், தொடக்கக்கல்வி மாவட்டக் கல்வி அலுவலர் பார்த்தசாரதி, ஒருங்கிணைப்பாளர்கள் அருணச்சலம், வெங்கட முத்து நடேசன் உளப்பட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications