ரயில்களில் 2ம் வகுப்பு பெட்டிகளை மாற்றும் முடிவு தற்காலிகமானதே... தெற்கு ரயில்வே விளக்கம்
சென்னை: ரயில்களில் 2-ம் வகுப்பு படுக்கை வசதியுள்ள பெட்டிகளை முற்றிலும் நீக்கும் திட்டம் எதுவும் இல்லை என தெற்கு ரயில்வே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
எக்ஸ்பிரஸ் ரயில்களில் 2ம் வகுப்பு ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைத்து, மூன்றாம் வகுப்பு ஏ.சி., பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
ரயில்வே துறையை நவீனப்படுத்தவும், பயணிகள் வசதியை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ள இந்தியன் ரயில்வே நிர்வாகம், அதற்குத் தேவையான நிதியை பயணிகளின் டிக்கெட் வாயிலாக பெற இத்தகைய முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்பட்டது.
ஆனால், ஊடகங்களில் வெளியான இச்செய்தியை ரயில்வே நிர்வாகம் மறுத்துள்ளது.

2ம் வகுப்பு பெட்டிகள் மாற்றம்...
எர்ணாகுளம்-நிஜாமுதீன் (டெல்லி) மங்களா எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண்:12617) எஸ்-2 என்ற படுக்கை வசதி கொண்ட 2 ஆம் வகுப்பு பெட்டி ஞாயிற்றுக்கிழமை முதல் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பி-4 என்ற 3 அடுக்கு ஏ.சி. பெட்டி பொருத்தப்பட்டுள்ளது.

அதிகக் கட்டணம்...
இதன் மூலம் அந்த ரயிலில் 2 ஆம் வகுப்பு பெட்டிகள் 10 ஆக குறைந்துள்ளது. அதாவது, 2 ஆம் வகுப்பு படுக்கைக்கான 72 டிக்கெட்டுகள், ஏ.சி. கட்டணத்துக்கு மாறிவிட்டது. இந்த ரயிலில் எர்ணாகுளத்தில் இருந்து டெல்லிக்கு 2 ஆம் வகுப்பு டிக்கெட் கட்டணம் ரூ.925. ஆனால், மூன்றடுக்கு ஏ.சி. கட்டணம் ரூ.2,370 என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற ரயில்களிலும்...
அதேபோல, சென்னை எழும்பூர்-மங்களூர் சென்டிரல் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:16859) ரயிலில் எஸ்-7 என்ற 2 ஆம் வகுப்பு பெட்டி ஞாயிற்றுக்கிழமையும், மங்களூர் சென்டிரல்-சென்னை எழும்பூர் (வண்டி எண்:16860) எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ்-9 என்ற 2 ஆம் வகுப்பு பெட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) முதலும் நீக்கப்படுகிறது. இதற்கு பதிலாக இரு மார்க்கங்களிலும் டி-4 என்ற ஏ.சி.சேர்கார் பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

5 அல்லது 6 ஆண்டுகளில்...
மேலும், பாலக்காடு, திருவனந்தபுரம் ரயில்வே டிவிஷனில் 2 ஆம் வகுப்பு பெட்டி தயாரிக்க அனுமதி தரப்படவில்லை எனவும் தகவல் வெளியானது. இதன் மூலம், படிப்படியாக 2ம் வகுப்பு படுக்கை பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப் பட்டு, இன்னும் 5 அல்லது 6 வருடங்களில் முற்றிலுமாக அவை நீக்கப் பட்டு விடும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

பாதிப்பு...
ரயில்வே நிர்வாகம் இத்தகைய நடவடிக்கை மேற்கொண்டால் அது நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு அதிக பாதிப்பாக அமையும் எனக் கண்டனக் குரல்கள் எழுந்தன.

விளக்கம்...
இந்நிலையில், 2ம் வகுப்பு பெட்டிகளை குறைக்கும் முடிவு தற்காலிகமானது தான், நிரந்தரமானதல்ல என தென்னிந்திய ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

பற்றாக்குறை தான் காரணம்...
மேலும், 2ம் வகுப்பு பெட்டிகள் பற்றாக்குறை காரணமாகவே, சில ரயில்களில் மட்டும் மூன்றாம் வகுப்பு ஏ.சி., பெட்டிகளாக மாற்றப்படுவதாகவும், அவை மீண்டும் 2ம் வகுப்பு பெட்டிகளாக மாற்றப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications