நளினியின் விடுதலை எப்போது... சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை... தேசிய மகளிர் ஆணைய தலைவர் தகவல்
சென்னை: நளினியின் விடுதலை குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து வருவதாக தேசிய மகளிர் ஆணைய தலைவர் லலிதா குமாரமங்கலம் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நளினி சிறையில் இருந்து வருகிறார். கருணை அடிப்படையில் தன்னை விடுதலை செய்யுமாறு பல்வேறு வழியில் நீதிதுறையின் மூலம் போராடி அவர் வருகிறார். இந்நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் தன்னை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுமாறு தேசிய மகளிர் ஆணையத்திற்கு மனு ஒன்றை அளித்திருந்தார்.

இதுதொடர்பாக, தேசிய மகளிர் ஆணையத் தலைவர் லலிதா குமாரமங்கலம், நளினி எழுதியுள்ள கடிதம் இன்னும் தனக்கு கிடைக்கவில்லை என்றாலும், செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும், நளினியின் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் ஒரு நிலைபாட்டை எடுத்துள்ள நிலையில், மகளிர் ஆணையம் நளினியின் விடுதலையில் தலையிட முடியுமா என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மகளிர் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள மனு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சனிக்கிழமை நளினி மீண்டும் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தில் சிறையில் தன்னோடு இருந்த பல பெண்கள் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் போன்ற முக்கிய நாட்களில் விடுதலையாகி சென்றுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், சிறையில் இருக்கும் ஒவ்வொரு நாளும் கண்ணீருடன் கழிப்பதாகவும் நளினி அந்தக் கடித்தத்தில் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட பேரறிவாளன், முருகன், சாந்தன் என 7 பேர் சிறையில் இருந்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications