பணத்தை கொடுத்து அதிமுகவும்-திமுகவும் வாக்குகளை பறிக்க முயற்சி: சீமான் குற்றச்சாட்டு
ராமநாதபுரம்: அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் பணத்தை கொடுத்து வாக்குகளை பெற்றுவிடலாம் என நினைக்கிறார்கள் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபைக்கு நடைபெறவுள்ள தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்திய சீமான், தமிழகம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அதன் ஒருபகுதியாக ராமநாதபுரம் அரண்மனை அருகே தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்ட சீமான் பேசியதாவது: தமிழ் தேசிய நலத்தின் இறையாண்மை உரிமையை கேட்கிறோம். தமிழ் மண்ணை தமிழன் ஆண்டு இருந்தால் இவ்வளவு பெரிய துன்பம், துயரம், வறுமை, ஏழ்மை வந்து இருக்காது.
தமிழன் நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்பது அந்த இனத்தின் அடிப்படை உரிமை. எல்லை தாண்டி செல்வதற்காக மீனவர்கள் சிறை பிடிக்கப்படவில்லை. தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக சிறை பிடிக்கப்படுகின்றனர். தேர்தல் அறிக்கையில் விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக கூறுகிறார்கள். இந்த விவசாயியை கடனாளியாக ஆக்கியது யார்? கடன் வாங்கி கல்வி கற்க வைத்தது யார்? தகப்பன் இல்லாத வீடு தட்டுக்கெட்டு நிற்பது போல் சரியான தலைவன் இல்லாமல் தமிழ்நாடும், தமிழ் இனமும் தட்டுக் கெட்டு நிற்கிறது. கருணாநிதியும், ஜெயலலிதாவும் நம்மை அடிமைப்படுத்த நினைக்கின்றனர்.
ஆட்சியில் இருக்கும் போது மதுவிலக்கை பற்றி வாய் திறக்காத ஜெயலலிதா மக்களிடம் வாக்கு கேட்க வரும் போது மதுவிலக்கை படிப்படியாக குறைப்பதாக கூறுகிறார். முதலில் அந்த இரண்டு தலைவர்களுக்கும் சொந்தமான மது ஆலைகளை மூடட்டும். காமராஜர் காலத்தில் உண்மையும், நேர்மையும் நிறைந்த எளிமையான ஆட்சி நடைபெற்றது.
ஊழல், லஞ்சம், மதுவை ஒழிப்பதாக சொல்கிறார்கள். மக்கள் அவர்களையே ஆட்சியை விட்டு ஒழிக்க வேண்டும். உண்மையான,நேர்மையான ஆட்சியை நிறுவ உங்கள் பிள்ளைகள் துடிக்கிறோம் பலமுறை அ.தி.மு.க.- தி.மு.க. விற்கு வாக்களித்து அதிகாரத்தை கொடுத்து விட்டீர்கள். மறுபடியும் நீங்கள் ஜெயலலிதாவுக்கோ, கருணாநிதிக்கோ வாக்களித்து அதிகாரத்தை கொடுக்காதீர்கள். பணத்தை கொடுத்து வாக்கை பறிக்கலாம் என்று இந்த ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர். இது தேர்தல் அல்ல. மாறுதலுக்கான புரட்சிக்கான களம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு சீமான் பேசினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications