அதிமுக இணைந்தால் என்ன, இணையாவிட்டால் என்ன.. சீமான் பொளேர்!
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால் என்ன, இணையாவிட்டால் என்ன என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால் என்ன இணையாவிட்டால் என்ன என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
அதிமுக இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.இணையப் போவதாக நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இந்த நிலையில் இதுகுறித்து சென்னையில் சீமானிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த அவர் அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து 3 மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அது இணைந்தால் என்ன, இணையாமல் போனால் எனக்கென்ன.
தமிழகத்துக்கு பாதிப்பில்லாமல் காவிரியில் கர்நாடகம் அணைக் கட்டுவது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழகம் எதிர்க்காதது ஏன். நதிநீரி உரிமைகளை தமிழகம் இழந்து வருகிறது.
நீட் தேர்வில் ஓராண்டுக்கு மட்டும் விலக்கு தருவது ஏன். கிராமப்புற, ஏழை மாணவர்களின் நலன்கருதி தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு தேவை என்றார் அவர்.