எம்ஜிஆர் மட்டும் பேர் வைக்காவிட்டால் அண்ணாவை யாருக்கும் தெரிஞ்சிருக்காது- சர்ச்சையில் செல்லூரார்!
மதுரை: எம்ஜிஆர் கட்சிக்கு அண்ணாவின் பெயரை வைத்திருக்காவிட்டால் அவரை யாருக்கும் தெரிந்ந்திருக்காது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
மதுரை முனி சாலையில் அண்ணா பிறந்த நாள் தொடர்பாக அதிமுக பொதுக் கூட்டத்தை நடத்தியது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில் அண்ணாவின் பெயரை கட்சிக்கு வைத்தவர் எம்ஜிஆர். அதுபோல் அவரது உருவத்தை கட்சியின் கொடியாக வைத்தார். எம்ஜிஆரின் யுத்தி, அந்த சாதுர்யமான முடிவுதான் அண்ணாவை பற்றி இந்த இயக்கம் 46 ஆண்டுகளாக புகழை பாடி கொண்டிருக்கிறோம்.
எம்ஜிஆர் மட்டும் இந்த இயக்கத்தை தொடங்காமல் இருந்திருந்தால் அண்ணா ஒருவர் இருந்தார், அவர் வாழ்ந்தார் என்பது இளைஞர் தலைமுறையினருக்கு தெரியாமலேயே போய் இருக்கும் என்றார்.
இதேபோல் மற்றொரு அண்ணா பிறந்தநாள் விழாவில் கருணாநிதிக்கு அரசு மரியாதை கொடுத்தது அதிமுக அரசின் பிச்சை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.