சென்னை ஹைகோர்ட்டில் பாலியல் புகார்களை விசாரிக்க தனி கமிட்டி!
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திலும் பாலியல் புகார்களை விசாரிக்க தனி கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பொன்.கலையரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த கமிட்டி அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் குமார் அக்ரவால், பாலியல் புகார்களை விசாரிக்கும் கமிட்டியின் தலைவர், 10 உறுப்பினர்கள் ஆகியோரை நியமித்துள்ளார்.
இந்த கமிட்டியின் தலைவராக மூத்த நீதிபதி சித்ரா வெங்கட்ராமனை, தலைமை நீதிபதி நியமித்துள்ளார். மேலும், உறுப்பினராக உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுதாகர், கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எச்.அரவிந்த்பாண்டியன், ஹேமா சம்பத், எம்.கே.கபீர், டி.பிரசன்னா, ஆர்.சி.பால்கனகராஜ், ஏ.எல்.காந்திமதி, துணை பதிவாளர் பி.பி.ரஞ்சிதா, சமூக சேவகி வித்யா ரெட்டி, வழக்கறிஞர் குமாஸ்தா பி.பானுமதி ஆகியோரை நியமித்துள்ளார்.
இதில், துணை பதிவாளர் ரஞ்சிதா, இந்த கமிட்டியின் உறுப்பினர் செயலாளராக செயல்படுவார். இதுபோல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மாவட்ட செசன்சு நீதிமன்றங்களில் பாலியல் புகார்களை விசாரிக்கும் கமிட்டியை அமைக்கும்படி அந்தந்த நீதிபதிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications