நாடு முழுவதும் நீதிபதிகள் உள்ளிட்ட விஐபிகளுக்கு சுங்கச் சாவடிகளில் தனி வழி.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
Recommended Video

சென்னை: நாடு முழுவதிலுமுள்ள சுங்க சாவடிகளில் (toll plazas) நீதிபதிகள் உள்ளிட்ட விஐபிகளுக்கு தனி வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை மீறினால், அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளுக்கு விழுப்புரம் மற்றும் சேலம் வட்டார அரசுப் போக்குவரத்து கழகங்கள் செலுத்த வேண்டிய சுங்க கட்டண நிலுவையை செலுத்துவது தொடர்பாக கிருஷ்ணகிரி-வாலாஜாபேட் எல்அன்டுடி டோல்வே நிறுவனத்தால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் எம்.வி.முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
"விஐபிகள், பணியில் உள்ள நீதிபதிகள் டோல் பிளாசாக்களில் காக்க வைக்கப்படுகிறார்கள். 10 முதல் 15 நிமிடங்கள், சுங்க சாவடிகளில் வீணடிக்கப்படுவது துரதிருஷ்டவசமானது. எனவே, பணியிலுள்ள நீதிபதிகள், விஐபிகளுக்கு டோல் பிளாசாக்களில் தனி வழி ஏற்படுத்த வேண்டும். நாட்டிலுள்ள அனைத்து சுங்கச்சாவடிகளுக்கும் இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அப்படி செய்யாவிட்டால், நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
வழக்கு விசாரணை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இருக்கும் டோல் பாதைகளில் ஒன்று விஐபிகளுக்கு ஒதுக்கப்பட்டால் மற்ற பாதைகளில் வழக்கத்தைவிட கூடுதலாக வாகனங்கள் முந்தியடிக்கும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. இதை டோல் பிளாசா நிர்வாகங்கள் எப்படி சமாளிக்கப்போகின்றன என்பது வரும் வாரங்களில் தெரியவரும்.
-
டோல் கட்டணத்தைத் தவிர்க்க.. இதை மட்டும் பண்ணாதீங்க.. மத்திய அரசின் வார்னிங்.. கவனம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications