சிபிஐ வழக்கிலிருந்து விடுவிக்க கார்த்தி சிதம்பரம் மனு.. விசாரிக்க மறுத்த சென்னை ஹைகோர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை ரத்து செய்ய கோரும் கார்த்தி சிதம்பரம் மனுவை விசாரிக்க மறுத்த சென்னை ஹைகோர்ட், இது தொடர்பாக அவர் டெல்லி கோர்ட்டை அணுக வேண்டும் என கூறியுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றதாக கூறி சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

Setback for Karti Chidambaram: Madras HC refuses to quash FIR in INX Media case

இந்த வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் கார்த்தி. ஆனால் இது தங்கள் விசாரணை வரம்புக்குள் வராது என ஹைகோர்ட் கூறியதோடு, டெல்லி பட்டியாலா கோர்ட்டை அணுகுமாறு கார்த்தி சிதம்பரத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

ஆகஸ்ட் 23ம் தேதி சிபிஐயிடம் ஆஜராகி விளக்கம் அளிக்க கார்த்தி சிதம்பரத்திற்கு சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டது. மேலும் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான லுக்அவுட் நோட்டீசுக்கு சென்னை ஹைகோர்ட் இடைக்கால தடை விதித்ததையும் நீக்கியது சுப்ரீம் கோர்ட்.

சிபிஐ முன்னிலையில் ஆஜராவதை ஏன் தவிர்க்கிறீர்கள் என்று கார்த்தி சிதம்பரத்திடம் சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியிருந்தது. இந்த நிலையில் சென்னை ஹைகோர்ட் இந்த வழக்கை எடுக்க மறுத்துள்ளது கார்த்திக்கு சட்ட ரீதியில் மற்றொரு பின்னடைவாக அமைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+