செத்தும் கொடுத்த வள்ளல் சீதக்காதியை போல்.. உடல் உறுப்பு தானத்தால் 7 பேருக்கு வாழ்வளித்த சண்முகதுரை!
நெல்லை: செத்தும் கொடுத்த வள்ளல் சீதக்காதியை போல், உடல் உறுப்புகள் தானத்தால் மரணத்திற்கு பிறகும் 7 பேருக்கு வாழ்வளித்துள்ளார் தென்காசியை சேர்ந்த சண்முகதுரை.
விபத்தில் சிக்கி மூளைச்சாவு: தென்காசி மாவட்டம் சிவகரி பகுதியை சேர்ந்தவர் சண்முகதுரை. 52 வயதான இவர் டூவிலரில் சென்ற போது விபத்தில் சிக்கி நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனிடையே சண்முகதுரை மூளைச்சாவு அடைந்ததால், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர். அதைத் தொடர்ந்து சண்முகதுரையின் உடலில் இருந்து நுரையீரல், கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், மற்றும் கருவிழிகள் என முக்கிய உறுப்புகள் இன்று காலை எடுக்கப்பட்டன.

உடல் உறுப்புகள்: அதனை மருத்துவ முறைப்படி முறையாக சென்னை, மதுரை, உள்ளிட்ட ஊர்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அதிவேகமாக அனுப்பி வைக்கப்பட்டன. சண்முகதுரையின் நுரையீரலானது சென்னை காவேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல் கல்லீரல் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு அனுப்பி வைகப்பட்டது. இரண்டு சிறுநீரகங்களில் ஒரு சிறுநீரகம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் நெல்லை அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கும் கொடுக்கப்பட்டது. இதயம் எந்த மருத்துவமனைக்கு கொடுக்கப்பட்டது என்ற விவரம் இல்லை.
கருவிழிகள்: இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் வரிசையில் கருவிழிகளும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொடுக்கப்பட்டது. இதன் மூலம் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த 4 பேருக்கு இறந்தும் வாழ்வு கொடுத்திருக்கிறார் சண்முகதுரை. இதனிடையே உடல் உறுப்புகளை தானம் செய்த சண்முகதுரைக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. உடல் உறுப்புகள் தானம் குறித்து அரசு பல்வேறு கட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதன் பலனாக முன்பைக் காட்டிலும் இப்போது உடல் உறுப்பு தானம் செய்ய முன் வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
7 பேருக்கு மறுவாழ்வு: இதயம், நுரையீரல், கல்லீரல், 2 சிறுநீரகங்கள், 2 கருவிழிகள் என மொத்த 7 உறுப்புகளை தானமாக கொடுத்து 7 பேரின் குடும்பத்தினருக்கு பெரும் உதவியை செய்திருக்கிறார் சண்முகதுரை.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications