செத்தும் கொடுத்த வள்ளல் சீதக்காதியை போல்.. உடல் உறுப்பு தானத்தால் 7 பேருக்கு வாழ்வளித்த சண்முகதுரை!
நெல்லை: செத்தும் கொடுத்த வள்ளல் சீதக்காதியை போல், உடல் உறுப்புகள் தானத்தால் மரணத்திற்கு பிறகும் 7 பேருக்கு வாழ்வளித்துள்ளார் தென்காசியை சேர்ந்த சண்முகதுரை.
விபத்தில் சிக்கி மூளைச்சாவு: தென்காசி மாவட்டம் சிவகரி பகுதியை சேர்ந்தவர் சண்முகதுரை. 52 வயதான இவர் டூவிலரில் சென்ற போது விபத்தில் சிக்கி நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனிடையே சண்முகதுரை மூளைச்சாவு அடைந்ததால், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர். அதைத் தொடர்ந்து சண்முகதுரையின் உடலில் இருந்து நுரையீரல், கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், மற்றும் கருவிழிகள் என முக்கிய உறுப்புகள் இன்று காலை எடுக்கப்பட்டன.

உடல் உறுப்புகள்: அதனை மருத்துவ முறைப்படி முறையாக சென்னை, மதுரை, உள்ளிட்ட ஊர்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அதிவேகமாக அனுப்பி வைக்கப்பட்டன. சண்முகதுரையின் நுரையீரலானது சென்னை காவேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல் கல்லீரல் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு அனுப்பி வைகப்பட்டது. இரண்டு சிறுநீரகங்களில் ஒரு சிறுநீரகம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் நெல்லை அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கும் கொடுக்கப்பட்டது. இதயம் எந்த மருத்துவமனைக்கு கொடுக்கப்பட்டது என்ற விவரம் இல்லை.
கருவிழிகள்: இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் வரிசையில் கருவிழிகளும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொடுக்கப்பட்டது. இதன் மூலம் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த 4 பேருக்கு இறந்தும் வாழ்வு கொடுத்திருக்கிறார் சண்முகதுரை. இதனிடையே உடல் உறுப்புகளை தானம் செய்த சண்முகதுரைக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. உடல் உறுப்புகள் தானம் குறித்து அரசு பல்வேறு கட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதன் பலனாக முன்பைக் காட்டிலும் இப்போது உடல் உறுப்பு தானம் செய்ய முன் வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
7 பேருக்கு மறுவாழ்வு: இதயம், நுரையீரல், கல்லீரல், 2 சிறுநீரகங்கள், 2 கருவிழிகள் என மொத்த 7 உறுப்புகளை தானமாக கொடுத்து 7 பேரின் குடும்பத்தினருக்கு பெரும் உதவியை செய்திருக்கிறார் சண்முகதுரை.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications