நீலகிரி மாவட்டத்தில் முழு கடையடைப்பு போராட்டம்! சாலைகள் வெறிச்! ஏன் என்னாச்சு!
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் இன்றைய தினம் வணிகர் சங்கங்கள் முழு கடையடைப்பு போராட்டத்தை நடத்துகிறார்கள்.
நீலகிரியில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடுக்க அந்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்றம் 2019ஆம் ஆண்டு மே மாதம் வெளியான தீர்ப்பில் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டுள்ள குளிர்பானங்கள், பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டுள்ள உணவு பொருட்கள பயன்படுத்த தடை விதித்துள்ளது.

அரசாணை நிலை எண் 84 இன்படி , 2018ஆம் ஆண்டில் ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தமிழகம் முழுவதும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை தடைவிதித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில் தொடர் பிளாஸ்டிக் ஒழிப்பு பணிகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்சமயம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து அரசு மற்றும் தனியார் வாகனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாததை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் நீலகிரி மாவட்டத்திற்குள் பயன்படுத்துவதையும், விற்பனை செய்வதையும், கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு, தொடர் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தும், பயன்படுத்துவோர் மீது அபராதம் விதிக்கப்பட்டும் வருகிறது.
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிகர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை கண்டித்து நீலகிரி மாவட்டத்தில் வணிகர்கள் இன்று முழு கடையடைப்பு போராட்டத்தை நடத்துகிறார்கள். அடுத்த மாதமும் நீலகிரியில் 10 ஆயிரம் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இன்று நடக்கும் இந்த கடையடைப்பை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் கடைகள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களை சிலர் நேற்றே வாங்கி வைத்துக் கொண்டனர். கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் அங்கு பொருட்களை வாங்க முடியாமல் சுற்றுலா பயணிகளும் அவதிப்படுகிறார்கள். மேலும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
பலர் ஊட்டியிலிருந்து இறங்கி வந்து மேட்டுப்பாளையத்தில் பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள். நீலகிரி மாவட்டம் காடுகள் நிறைந்த பகுதி. இங்கு அரிய வகை விலங்குகள், பறவைகள், உயிரினங்கள் உள்ளன. பிளாஸ்டிக் பயன்பாட்டால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைகிறது. மேலும் அந்த பிளாஸ்டிக்குகளை விலங்குகள் பயன்படுத்தினால் அதன் உயிருக்கே ஆபத்தாகிவிடும்.
இனி கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில் காடுகளில் தண்ணீர், உணவு கிடைக்காமல் விலங்குகள் ஊருக்குள் வரத் தொடங்கும். அப்போது இந்த பிளாஸ்டிக் பொருட்களை உணவு பொருட்கள் என நினைத்து சாப்பிட்டால் அது தொண்டையில் சிக்கி பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. மேலும் மண்ணில் புதையும் பிளாஸ்டிக்குகளால் நிலத்தடி நீர் மட்டத்திற்கும் ஆபத்து இருக்கிறது என்பதால்தான் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications