வக்கீல்களால் தாக்கப்பட்டதால் அரசுப் பேருந்து ஓட்டுநர் தற்கொலை முயற்சி!
Recommended Video
சிவகங்கை : வழக்கறிஞர்களால் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் பணி முடிந்து வீட்டிற்கு சென்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவங்கையில் சாலையை செப்பனிடக்கோரி பேருந்து நிலையத்தில் வழக்கறிஞர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அரசு பேருந்தை செல்வராஜ் என்பவர் ஓட்டிச்சென்றுள்ளார். இதனையடுத்து வழக்கறிஞர் ஒருவர் பேருந்தை துரத்திச் சென்று தடுக்க முயன்று மயக்கம் அடைந்தார். இதையடுத்து மற்ற வழக்கறிஞர்கள் பேருந்தை தடுத்து நிறுத்தி ஓட்டுநர் செல்வராஜின் சட்டையை இழுத்து தாக்கினர்.
வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்தியதால் மயக்கம் அடைந்த ஓட்டுநர் செல்வராஜை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் பணி முடிந்து பரமக்குடியில் உள்ள வீட்டிற்கு வந்த செல்வராஜ் அவமானம் தாங்காமல் விஷம் குடித்துள்ளார். செல்வராஜை மீட்ட குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கவலைக்கிடமான நிலையில் செல்வராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.