சிவகங்கை அருகே கச்சநத்தம் படுகொலை- பலி எண்ணிக்கை 3- ஆக உயர்வு
சிவகங்கை அருகே கச்சநத்தம் படுகொலை சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நபர் பலியானதைத் தொடர்ந்து அச்சம்பவத்தில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்தது.
Recommended Video
சிவகங்கை: சிவகங்கை அருகே நடந்த சாதி ரீதியிலான மோதலில் ஒரு பிரிவினரை கடுமையாக தாக்கிய சம்பவத்தில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.
கச்சநத்தம் மற்றும் ஆவரங்காடு கிராமங்கள் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளன. இங்கு கச்சநத்தம் கோயில் திருவிழாவில் முதல் மரியாதை வழங்குவது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இளைஞர்கள்
இதனால் இரு பிரிவினருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த சிலர் வழிமறித்து தாக்கியதாக தெரிகிறது.
காயம்
இதையடுத்து கடந்த 28-ஆம் தேதி கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களுடன் ஆவரங்காடு கிராமத்திநர் கச்சநத்தம் கிராமத்துக்குள் புகுந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் சுரேஷ், சந்திரசேகர், மருது, மலைச்சாமி, சுகுமாறன், ஆறுமுகம், சண்முகநாதன் உள்ளிட்டோர் காயமடைந்தனர்.
6 பேர் சிகிச்சை
இதையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் ஆறுமுகம் மற்றும் சண்முகநாதன் ஆகியோர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டனர். மற்ற 6 பேர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3-ஆவது நாளாக போராட்டம்
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்திரசேகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கெனவே உயிரிழந்த இருவரின் உடல்களை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே 3-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.