இனப்படுகொலை பயங்கரவாதி ராஜபக்சே வருகைக்கு எஸ்.டி.பி.ஐ கடும் எதிர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இனப்படுகொலை பயங்கரவாதி ராஜபக்சே இந்தியா வருவதற்கு எஸ்.டி.பி.ஐ கட்சி கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய சமூக ஜனநாயக கட்சியின் (எஸ்.டி.பி.ஐ) மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்...

மோடி பிரதமராக பதவியேற்கவுள்ள விழாவில் பங்கேற்பதற்காக இந்தியா வருகை தரவுள்ள இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கு எஸ்.டி.பி.ஐ கட்சி தனது கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவிக்கிறது.

Social Democratic Party of India(SDPI) condemns Rajapakse visit

2009 ல் இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரில் லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். பல லட்சம் மக்கள் அகதிகளாக்கப்பட்டதுடன், தமிழ் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டனர்.

இத்தைகைய இனப்படுகொலை செய்த இலங்கை அரசிடம் காங்கிரஸ் நட்பு பாராட்டி வந்ததை போன்று. பா.ஜ.க வும் தொடக்கத்தில் இருந்தே நட்பு பாராட்டி வருகிறது. மேலும் அந்த நட்பை வலுப்படுத்தும் விதமாகத்தான் தற்போது மத்தியில் அமையவுள்ள பா.ஜ.க அரசின் பதவியேற்பு விழாவிற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வருகை தருகிறார் . இதற்கு எஸ்.டி.பி.ஐ கட்சி கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது.

ஆகவே, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இலங்கை இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சே இந்தியா வருவதை அனுமதிக்க கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+