"வலைஞர்"களைக் கவர்ந்த முதலீட்டாளர்கள் மாநாடு.. எப்படி?.. இப்பூடி!
சென்னை: சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு தொழிலபதிர்களைக் கவர்ந்ததா இல்லையா என்பது நாளை தெரிய வரும். ஆனால் அந்த மாநாடு தொடர்பாக தமிழக அரசு செய்திருந்த சில ஏற்பாடுகள் "வலைஞர்களை" நன்றாகவேக் கவர்ந்துள்ளது.
நீண்ட பெரும் தாமதத்திற்குப் பின்னர் இன்று சென்னையில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகள் இந்த மாநாட்டின் மீது குவிந்துள்ளன.
இந்த நிலையில் மாநாடு தொடர்பாக தமிழக அரசு செய்திருந்த சில ஏற்பாடுகள் மக்களைக் கவர்ந்துள்ளன. குறிப்பாக சமூக வலைதளங்களில் இதுதொடர்பான வரவேற்பு பலமாகவே காணப்படுகிறது.
முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக மெரீனா கடற்கரையில் தமிழக அரசு அமைத்திருந்த ஒளித்திரை, பின்னர் நீர்த்திரை போன்றவை மக்களைக் கவர்ந்தன.
வெல்கம் டூ தி பாரடைஸ்!
Posted by Anbalagan Veerappan onTuesday, September 8, 2015
அதேபோல முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக மக்களிடம் கருத்தைக் கொண்டு சேர்ப்பதற்காக அரசு ஏற்பாடு செய்திருந்த நடனக் கலைஞர்களின் டான்ஸும் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான படங்களுடன், மக்கள் கருத்தும் பிரமாதமாக உள்ளது.
இதோ இந்த பேஸ்புக் பதிவு ஒரு சாம்பிள்...!