Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தண்ணீரில் மூழ்கி கிடக்கும் சோழிங்க நல்லூர் - அவதியில் ஐ.டி.நிறுவன ஊழியர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பெய்த கனமழையால் புறநகர் பகுதியான சோழிங்கநல்லூர் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

ஐ.டி நிறுவனங்கள் நிறைந்துள்ள பகுதியான இங்கு கல்லூரிகள், விடுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. அந்த பகுதிகளில் படகுகளுடன் மீனவர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சோழிங்கநல்லூரில் உள்ள சதுப்பு நிலப்பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால் தாழ்வான நிலங்களில் தண்ணீர் புகுந்து ஏரி போல் காட்சியளிக்கிறது

விடுதிகள் ஏராளம்:

விடுதிகள் ஏராளம்:

ஐ.டி நிறுவனங்கள் நிறைந்துள்ள சோழிங்கநல்லூர் பகுதியில் பணிபுரிவோருக்கான தங்கும் விடுதிகள் ஏராளமாக உள்ளன. இங்கிருப்பவர்களை படகுகள் மூலம் மீனவர்கள் உதவியுடன் மீன்வளத்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் மீட்டு வருகின்றனர்.

மின்சாரம் துண்டிப்பு:

மின்சாரம் துண்டிப்பு:

மழை காரணமாக வீட்டிலிருந்தே இணையதளம் மூலமாக பணிகளை முடிக்கும் படி ஐ.டி நிறுவனங்கள் அறிவுறுத்தினாலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அதற்கான பணிகளை செய்து முடிக்க சிரமம் ஏற்பட்டுள்ளதாக ஐ.டி நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்குவதற்கு சிரமம்:

தங்குவதற்கு சிரமம்:

மேலும், தங்குவதற்கு குறைந்த விலையிலான பிளாட்களை தேர்வு செய்வதால், மழை காலங்களில் சிரமத்துக்குள்ளாவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மீட்புப் பணி தீவிரம்:

மீட்புப் பணி தீவிரம்:

சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து வருவதால் ஏராளமான மக்கள் டிராக்டர்கள், லாரிகள் மூலமாகவும் மீட்கப்பட்டு வருகின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று மீட்கப்பட்ட நிலையில் சோழிங்கநல்லூர் பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+