சென்னை உட்பட தமிழகத்தின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் ஜில் தகவல்!
சென்னை உட்பட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையிலும் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது.
இதனால் தென் மாவட்டங்களில் சுட்டெரித்த வெயில் குறைந்து இதமான சூழல் நிலவியது. மேலும் தென் மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளும் வேகமாக நிரம்பின.

மக்கள் மகிழ்ச்சி
இதன் காரணமாக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோடைக்காலத்தின் தொடக்கத்திலேயே கொட்டிய மழையால் தண்ணீர் தட்டுப்பாடு பெருமளவு இருக்காது என மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தாழ்வு பகுதியானது
இந்நிலையில் அரபிக் கடல் பகுதிக்கு நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுகுறைந்து தாழ்வு பகுதியானது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மழை
இதன்காரணமாக வடதமிழகத்தின் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் கூறினார்.

இடியுடன் கூடிய மழை
மேலும் சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக பாலச்சந்திரன் கூறியுள்ளார். தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, திருவண்ணாமலையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்












Click it and Unblock the Notifications