திமுக ஆதரவு குறித்து சோனியாகாந்தி முடிவெடுப்பார்: நாராயணசாமி
Subscribe to Oneindia Tamil

நேற்று சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டார் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி. அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, 'காவிரி விவகாரத்தில் பிரதமர் தலையீட்டாலேயே தமிழகத்திற்கு 2 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது; கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழகம் மற்றம் புதுச்சேரிக்கு காவிரி நீரை பெற்றுத்தர மத்திய அரசு வலியுறுத்தும். ராஜ்யசபா தேர்தலில் திமுக.,வை ஆதரிப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா தான் முடிவு செய்ய வேண்டும். ஆதரவு வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. மத்தியில் 3 வது அணி அமைய வாய்ப்பே இல்லை. அது பகல் கனவு' என்றார்.












Click it and Unblock the Notifications