ரஜினி பாஜகவோடு கூட்டணி சேர்ந்தால் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் கதிதான்... நாஞ்சில் சம்பத்
ரஜினி பாஜகவோடு கூட்டணி வைத்தால் அவருக்கும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் ஏற்பட்ட நிலை தான் ஏற்படும் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்து உள்ளார்.
Recommended Video

புதுச்சேரி : ரஜினி கட்சி ஆரம்பித்து பாஜகவோடு கூட்டணி வைத்தால் அவருக்கும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட நிலை தான் கிடைக்கும் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்து உள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் நாஞ்சில் சம்பத் கூறியதாவது:
ஜெயலலிதா மரணம் குறித்து அமைக்கப்பட்டு உள்ள ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. முதல்வர் மற்றும் அமைச்சர்களிடம் இதுவரை எந்த விசாரணையும் நடத்தாது ஏன்?.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை
தினகரன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் மட்டுமே விசாரணை நடத்த வேண்டிய அவசியம் என்ன ? இதில் இருந்தே கமிஷன் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறது என்பது தெளிவாகிறது.

தனிக்கட்சிக்கு இடமில்லை
அதிமுக என்றுமே எங்கள் கட்சி தான். ஆனால், விரைவில் வரவிருக்கும் தேர்தல்களை சந்திக்க எங்களுக்கு தனி அமைப்பு ஒன்று தேவை என்கிற அடிப்படையில் தான் டி.டி.வி தினகரன் பேசி உள்ளார். தனிகட்சி என்கிற பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் ஒரு காலத்திலும் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இருவரையும் ஆதரிக்கமாட்டோம்.

ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் மோதல்
எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் எங்களுக்குத் தான் வெற்றி. அது விரைவில் தீர்ப்பு வரும்போது தெரியும். எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே இருந்த மோதல் தற்போது அதிகரித்து உள்ளது. விரைவில் அவர்கள் இருவருமே தங்களையே மாற்றி மாற்றி கட்சியில் இருந்து நீக்கிக்கொள்வதாக அறிக்கை வெளியாகும்.

ஆர்.கே நகர் இடைத்தேர்தல்
பாஜகவோடு யார் கூட்டு சேர்ந்தாலும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட முடிவு தான் அவர்களுக்கும் நடக்கும். அது ரஜினியாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி. அதனால் யார் கட்சி தொடங்கினாலும் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. இவ்வாறு நாஞ்சில் சம்பத் தெரிவித்து உள்ளார்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications