தென் மற்றும் வட தமிழகத்தில் கன மழை பெய்யுமாம்.. வானிலை மையம் வார்னிங்!
அடுத்த 24 மணி நேரத்தில் தென் மற்றும் வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

இடியுடன் வெளுத்து கட்ட போகும் கனமழை-வீடியோ
சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் தென் மற்றும் வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகத்தில் பல இடங்களிலும் வடதமிழகத்தில் சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நத்தம், அருப்புக்கோட்டை, காங்கேயத்தில் தலா 7.செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications