தண்ணி இல்லை, சுத்தம் இல்லை... ரயிலா இது... குமுறலில் தென் மாவட்ட பயணிகள்!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தென் மாவட்டங்களில் இயக்கப்படும் ரயில்களில் பராமரிப்பு படுமோசமாக இருப்பதால் பயணிகள் பரிதவித்து வருகின்றனர்.

தென் மாவட்டங்களில் இருந்து நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்னைக்கு இயக்கப்படுகின்றன. இவற்றில் பல ரயில்களில் பராமரிப்பு படுமோசமாக இருப்பதாக புகார் எழுந்து வருகின்றது.

குறிப்பாக சென்னையில் இருந்து நெல்லை, குமரி வழியாக கேரளாவுக்கு இயக்கப்படும் அனந்தபுரி, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் தண்ணீர் பற்றாக்குறை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் கழிவறைகளில் தூர்நாற்றம் வீசுகிறது.

Southern train passengers are upset over the ugly trains

நெல்லை, கன்னியாகுமரி தாதர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சராசரியாக 1000க்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். கடந்த சில மாதங்களாகவே இந்த ரயில்களில் பராமரிப்பு கேள்வி குறியாகி வருகிறது. இதற்கு காரணம் நெல்லை, நாகர்கோவில் ரயில் நிலையங்களில் நடக்கும் பராமரிப்பு பணியை தனியாருக்கு ஓப்படைத்தது தான் என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

பெட்டிகளை சுத்தப்படுத்துதல், தண்ணீர் பிடித்தல் உள்ளிட்ட பணிகளை ஓப்பந்த பணியாளர்கள் செய்து வருகின்றனர். ரயில்வே துறைக்கும், ரயில்வே ஊழியர்களுக்கும் பராமரிப்பு பணியில தொடர்பு இல்லை. சிக்கன நடவடிக்கை என கூறி ரயில்வே பணிகளை தனியாரிடம் கொடுத்துளளனர்.

இந்த பணிகளை ஓப்பந்த தொழிலாளர்கள் சரிவர செய்யவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. நெல்லை ரயில் நிலையத்தில் மட்டுமே நெல்லை எக்ஸ்பிரஸ், ஜம்மு தாவி, பிலாஸ்பூர், தாதர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் பீட்லைனில் சுத்தம் செய்யப்படுகின்றன. இங்கு போதிய ஊழியர்கள் இல்லை.

இதுகுறித்து நெல்லை பயணிகள் சிலர் கூறுகையில், ரயில்வேயின் சிக்கன நடவடிக்கையால் பல ரயில்களில் பராமரிப்பு படுமோசமாக இருக்கிறது. குறிப்பாக சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் இருந்து கேரள செல்லும் அனந்தபுரி, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் மதுரையை தாண்டினால் தண்ணீரே இல்லாத நிலை காணப்படுகிறது.

சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கழிவறை தண்ணீரை பயன்படுத்தி குளிப்பது கொடுமை என்று வருத்ததுடன் தெரிவித்தனர். குறிப்பாக ஓரு பெட்டியை சுத்தம் செய்ய தனியார் ஓப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ.20தான் கொடுக்கப்படுகிறது என கூறப்படுகிறது. இதனால் அவர்கள் பணிகளை சரிவர செய்யாமல் இருப்பதாக குறறம் சாட்டப்படுகிறது. இதனால் பயணிகள் திண்டாடி வருகின்றனர்.

பயணிகளை ரயில்வே எப்போதுதான் மதிக்கப் போகிறதோ... ஒரு வேளை "அந்நியன்" யாராவது வந்துதான் சரிப்படுத்த வேண்டுமோ??

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+