சபரிமலையில் முதியவர்கள், குழந்தைகள் தரிசனம் செய்ய சிறப்பு வசதி
தி்ருவனந்தபுரம்: சபரி்மலை ஐயப்பன் கோவிலில் இந்த வருட மண்டல பூஜைக்காக வரும் 16 ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது.
இதையொட்டி பக்தர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய ஏற்பாடுகள் குறித்து தேவசம் போர்டு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் சுவாமி தரிசனம் செய்ய மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

இதனால் இவர்கள் எளிதில் தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த கோரிக்கையை ஏற்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு இந்த வருட மண்டல சீசன் முதல் சபரிமலை வரும் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எளிதில் தரிசனம் செய்யும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதற்காக கோயில் அருகே சன்னிதானத்தில் புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. கோயில் வாளகத்தில் வடக்கு பகுதியில் இந்த பாலம் அமைக்கப்படுகிறது.
சபரிமலை வரும் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் 18 ஆம் படி வழியாக சென்று பாலத்தில் ஏறி வடக்கு நடை வழியாக வந்து தரிசனம் செய்ய வேண்டும். தரிசனம் முடிந்த பிறகு வடக்கு நடை வழியாக திரும்பி செல்ல வேண்டும். வரும் மண்டல சீசன் முதல் இந்த வசதியை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை












Click it and Unblock the Notifications