Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சபரிமலையில் முதியவர்கள், குழந்தைகள் தரிசனம் செய்ய சிறப்பு வசதி

Subscribe to Oneindia Tamil

தி்ருவனந்தபுரம்: சபரி்மலை ஐயப்பன் கோவிலில் இந்த வருட மண்டல பூஜைக்காக வரும் 16 ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது.

இதையொட்டி பக்தர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய ஏற்பாடுகள் குறித்து தேவசம் போர்டு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் சுவாமி தரிசனம் செய்ய மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

Special arrangements for old people and children in Sabarai malai…

இதனால் இவர்கள் எளிதில் தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த கோரிக்கையை ஏற்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு இந்த வருட மண்டல சீசன் முதல் சபரிமலை வரும் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எளிதில் தரிசனம் செய்யும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதற்காக கோயில் அருகே சன்னிதானத்தில் புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. கோயில் வாளகத்தில் வடக்கு பகுதியில் இந்த பாலம் அமைக்கப்படுகிறது.

சபரிமலை வரும் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் 18 ஆம் படி வழியாக சென்று பாலத்தில் ஏறி வடக்கு நடை வழியாக வந்து தரிசனம் செய்ய வேண்டும். தரிசனம் முடிந்த பிறகு வடக்கு நடை வழியாக திரும்பி செல்ல வேண்டும். வரும் மண்டல சீசன் முதல் இந்த வசதியை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+