பகவானே...மழையைக் கொடு... சிறப்பு யாகம் செய்த ஶ்ரீசங்கரமட சுவாமிகள்! வீடியோ
விழுப்புரம் ஆஞ்சநேயர் கோயில் மற்றும் ஶ்ரீசங்கரமடத்தை சேர்ந்தவர்கள், தமிழகத்தில் உள்ள வறட்சி நீங்கி மழை பெய்ய வேண்டும் என சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் செய்துள்ளனர்.
விழுப்புரம்: தமிழ்நாட்டில் நிலவும் வறட்சி நீங்கி மழை பெய்ய வேண்டி விழுப்புரத்தில் யாகம் செய்துள்ளனர். ஆஞ்சநேயர் கோயில் மற்றும் ஶ்ரீ சங்கரமடத்தைச் சேர்ந்தவர்கள் இந்த யாகத்தை நடத்தியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்த காரணத்தால் வரலாறு காணாத வகையில் கடும் வறட்சி நிலவி வருகிறது. 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சி நிலவுகிறது. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணமடைந்துள்ளனர்.

மேலும் ஏரி, குளம், ஆறுகளில் நீர் வற்றிவிட்டதால் குடிநீருக்கு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கடுமையான வெப்பமும் நிலவி வருவதால் மக்கள் கடும் துயரத்துக்கு ஆட்பட்டு வருகின்றனர்.
மழை பெய்தால்தான் இனி இருக்கும் நாட்களில் குடிப்பதற்கு கொஞ்சமாவது நீர் கிடைக்கும் என்கிற நிலை உருவாகியுள்ளது. குடிநீருக்காக மக்கள் பல மைல்தூரம் நடந்து சென்று, பல மணிநேரம் காத்திருந்து ஒரு குடம் நீரை சுமந்து வருகின்ற மிக சோகமான சூழ்நிலை தமிழகம் முழுவதும் உள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் ஆஞ்சநேயர் கோயில் மற்றும் ஶ்ரீசங்கரமடத்தை சேர்ந்தவர்கள் மழை பெய்ய வேண்டும் என்று சிறப்பு யாகம் செய்துள்ளனர். இவர்கள் குளத்தில் நீரில் நின்று மந்திரங்களை ஜெபித்து மழை வரவேண்டும் என பிரார்த்தனை செய்துள்ளனர்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications