தீபாவளி பண்டிகை: திருச்சி, நெல்லைக்கு சிறப்பு ரயில்கள்; முன் பதிவு தொடங்கியது
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் திருச்சி மற்றும் திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்க உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
திருச்சியில் இருந்து சென்னைக்கு வரும் 29-ம் தேதி சிறப்பு ரயில் (06026) இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து 29-ம் தேதி பிற்பகல் 3.15 மணிக்கு பறப்பட்டு இரவு 9.10 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இதேபோல் எழும்பூரில் இருந்து திருச்சிக்கு 31-ம் தேதி சிறப்பு ரயில் (06025) இயக்கப்படுகிறது. இந்த ரயில் 31-ம்தேதி காலை 9 மணியளவில் எழும்பூரில் இருந்து புறப்பட்டு மதியம் 2.30-க்கு திருச்சி சென்றடையும்.

எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு 29-ம் தேதி சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் (06041) 29-ம் தேதி இரவு 10.45 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு திருநெல்வேலிக்கு சென்றடையும்.
திருநெல்வேலியில் இருந்து எழும்பூருக்கு 30-ம் தேதி சுவிதா சிறப்பு ரயில் (82610) இயக்கப்படுகிறது. இந்த ரயில் 30-ம் தேதி மாலை 6.20 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு எழும்பூர் வந்தடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு தொடங்கியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications