பயப்படாதீங்க, பருவ மழை இயல்பாகவே இருக்கும் - எஸ்.ஆர். ரமணன்
Recommended Video

சென்னை: வட கிழக்குப் பருவ மழை இயல்பாகவே இருக்கும் என எதிர்பார்க்கிறேன். மிக கன மழைக்காலங்களில் மட்டும் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று முன்னாள் வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் கூறியுள்ளார்.
வட கிழக்குப் பருவ மழை தொடங்கவுள்ளது. இதுதொடர்பாக பலவேறு கணிப்புகள் வெளியாகி வருகின்றன. பயமுறுத்தும் படியான கணிப்புகளையும் பலர் வெளியிடுகின்றனர்.

இந்த நிலையில் வருகிற 7ம் தேதி மிக மிக கன மழை இருக்கும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் ஒரு விதமான படபடப்பு இருப்பது உண்மைதான்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு எஸ்.ஆர்.ரமணன் அளித்த பேட்டியின்போது விளக்கினார். அவர் கூறுகையில், இந்த வருடம் வட கிழக்குப் பருவ மழையானது இயல்பு நிலையில் இருக்கவே வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு நிறுவனமும் ஒரு கணிப்பை கூறியுள்ளது. ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் இயல்பு நிலை அல்லது அதற்கு மேலான அளவில் மழை இருக்கலாம்.
கடந்த பல மாதமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை இல்லை. எனவே கன மழை வந்தாலும் கூட பூமியே பாதி நீரை ஈர்த்துக் கொள்ளும். எனவே பெரிய அளவிலான பாதிப்பை எதிர்பார்க்க வேண்டியதில்லை. அதேசமயம், தொடர்ந்து கன மழை பெய்தால் நாம் கவனமாக இருந்தாக வேண்டும். அதற்குறிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கன மழைக்காலங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்படுவது இயல்புதான். அந்த வகையில் மிக கன மழை பெய்யக் கூடிய நாட்களில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது என்றார் ரமணன்.
-
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன












Click it and Unblock the Notifications