For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

20 தமிழக மீனவர்களை சிறை பிடித்தது இலங்கை கடற்படை

Google Oneindia Tamil News

மன்னார்: தமிழகத்தைச் சேர்ந்த 20 மீனவர்களை சிறை பிடித்து வந்து மன்னாரில் வைத்துள்ளது இலங்கை கடற்படை.

இந்தியக் கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த இவர்களை, இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி வந்ததாக கூறுகிறது இலங்கை கடற்படை. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மன்னார் காவல்துறையினரிடம் 20 பேரையும் ஒப்படைத்துள்ளது இலங்கை கடற்படை. அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

அடுத்தடுத்து இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படை சிறைபிடிப்பதும், சிறையில் அடைப்பதும் தொடர் கதையாகி வருகிறது. ஆனால் இந்திய அரசோ வாய் மூடி தொடர்ந்து மெளனமாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Sri Lankan Navy personnel have arrested 20 Tamil Nadu fishermen on Sunday for allegedly poaching in Sri Lankan waters. A PTI report said the fishermen from a coastal town in Rameswaram were arrested when they were fishing in the Palk Straits.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X